தில்லியில் வருகிற பிப். 5 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் புது தில்லி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் பிரவேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீக்ஷித் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

