தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களையும், களப்பணிகளையும் இப்போதிருந்தே தொடங்கியுள்ளன. அதன்படி, சட்டப்பேரவை எதிர்கட்சியான அதிமுக சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.