கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவ தாக்குதலில் 18 போராளிகள் உயிரிழந்தனர்.
உளவுத் தகவலின் அடிப்படையில் பலுசிஸ்தானின் குவெட்டா மாவட்டம், சில்டன் மலைத்தொடரிலும், கெச் மாவட்டத்தின் புலேடாவிலும் பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவு தேடுதல் பணி மேற்கொண்டது.
இதில் ராணுவத்தினர் – பலுசிஸ்தான் போராளிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 18 போராளிகள் உயிரிழந்தனர். அங்கிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

