1948ல் பலுசிஸ்தான் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டதாகவும், இங்குள்ள எண்ணெய், கனிம வளங்கள் பாகிஸ்தான் அரசால் சுரண்டப்படுவதாகவும் குற்றம்சாட்டி வரும் இந்த அமைப்பு, பலூசிஸ்தானின் சில மாவட்டங்களை ஆட்சி செய்வதாக அறிவித்திருக்கிறது.
அமெரிக்கா பாகிஸ்தான் நெருக்கம்!
கடந்த ஜூலை 31, 2025ல் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பாகிஸ்தானில் அமெரிக்கா உதவியுடன் எண்ணெய் வளங்களை ஆராயவும் மேம்படுத்தவும் உடன்படிக்கை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிக எண்ணெய், கனிம வளம் கொண்ட பலுசிஸ்தானில் இந்த ஆய்வுகள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நெருக்கம் அதிகரித்திருக்கிறது. “இந்தியா பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை ஏற்படலாம்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதையும் நினைவில் கொள்ளலாம்.

