Last Updated:
இந்தியா – பாகிஸ்தான் ராணுவத் தளபதிகள் மட்டத்தில் நாளை நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, விமானப்படை தளபதி ஏ.பி. சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழல் குறித்து முப்படை தளபதிகளிடம் பிரதமர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தாக்கினால் பதிலுக்கு தாக்கும்படி பிரதமர் மோடி கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியா – பாகிஸ்தான் ராணுவத் தளபதிகள் மட்டத்தில் திங்களன்று நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் விவகாரத்தில் முப்படைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் 3 ஆவது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.
Delhi,Delhi,Delhi
பாகிஸ்தானுடன் மோதல் நிறுத்தம்… அடுத்தகட்டம் என்ன? – முப்படைகளின் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை


