பாகிஸ்தானின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். அங்கு நிலவும் பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்களால் அங்கு செல்ல அண்டை நாட்டு மக்கள் கூட அஞ்சுகின்றனர். ஆனால், ஒரு சிலர் மிகவும் சிக்கலான இடங்களுக்குச் செல்வதை ஒரு த்ரில் செயலாக செய்து வருகின்றனர். இதேபோல், நெதர்லாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், அண்மையில் பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றார்.
2012ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை சுற்றி வரும் இவர், இதுவரை 159 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அவர் செல்லும் நாடுகளில் இருக்கும் சிறப்புகள் மற்றும் வித்தியாசமான அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் அண்மையில் பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றபோது, அங்கு மிகவும் மலிவான விலையில் கிடைத்த ஹோட்டல் அறையை பதிவு செய்தார்.
பெஷாவர் நகரில் பாகிஸ்தான் பணத்திற்கு வெறும் 117 ரூபாய் தான். முதலில் பெஷாவரில் சிலரைச் சந்தித்து ஹோட்டல் அறையை வாடகைக்கு பிடிப்பது குறித்து பேசியுள்ளார். பின்னர், ஒரு அறையை புக் செய்த அவர், அங்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்கு உள்ளானார்.
இதையும் படிங்க:
சச்சின், தோனிக்கு கிடைக்கும் மரியாதை கோலிக்கு கிடைக்காது, ஏனென்றால்… – காரணங்களை அடுக்கும் அமித் மிஸ்ரா
ஆம்! முதலில் குறுகலான படிக்கட்டுகளில் ஏறிய அவர், அந்த இடமே மோசமாக இருப்பதைப் போல உணர்ந்த அவருக்கு, அறைக்குள் நுழைந்ததும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அந்த அறையில் இரண்டு படுக்கைகளும், ஒரு சிறிய டிவி வசதியும் இருந்தது. இவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கும் அறையில் டிவி இருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்த அவர், அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலாகித்து எழுதியுள்ளார்.
அந்த அறையில் இவரைப் போன்றே மற்றொரு பயணப் பதிவரும் ஏற்கெனவே அங்கிருந்தார். இந்த வீடியோ 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பலரும் இது குறித்து கருத்து பதிவிட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நாட்டில் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஏன் வீணடிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
