Last Updated:
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் கைபர் பக்துன்க்வாவில் 9 பேர், ஆப்கானிஸ்தானில் 11 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை மீட்புப்படையினர் மீட்டனர்.
இந்நிலையில், முர்ரீ பகுதியில் சாலைகளில் பனிக்கட்டிகள் சூழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து முர்ரீ பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன.
தடையை மீறிச் சென்ற ஏராளமான வாகனங்கள், பனிக்கட்டிகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டன.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, 6 மாகாணங்களில் 11 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகம்மது யூசுப் தெரிவித்தார். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


