பாகிஸ்தான் எம்.பி. ஒருவர், நாடாளுமன்றத்திற்குள் ஒரு தக்காளியை கொண்டுவந்து, “இதனை இங்கு கொண்டுவருவதே மிகவும் சவாலான விஷயம். இந்த ஒரு தக்காளியின் விலை ரூ. 75!” என பேசும் வீடியோவும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும், சில அரசியல்வாதிகள், பாகிஸ்தானில், வங்கிக் கடன் வாங்கித்தான் தக்காளி வாங்க முடியும் என கடுமையாக அரசின் மீது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.


