Last Updated:
பஹ்ரைன் மீதான தாக்குதல்கள் உலகளாவிய உணவு, எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், பஹ்ரைனில் வசிக்கும் இந்திய சமூகத்தின் நலனில் காட்டி வரும் அக்கறைக்கு அந்நாட்டு மன்னருக்கு நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பஹ்ரைனில் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கண்டனத்துக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீபாவுடன் (Hamad Bin Isa Al Khalifa) தொலைபேசி வாயிலாக பேசியதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பஹ்ரைன் மன்னருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஈகை திருநாள் வாழ்த்து சொன்னதாக குறிப்பிட்டுள்ளார்.
மேற்காசியவில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாகவும், சர்வதேச வர்த்தகத்துக்காக கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் அவசியத்தையும் இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
Had a fruitful discussion with the King of Bahrain, His Majesty King Hamad Bin Isa Al Khalifa. Conveyed warm greetings on the occasion of Eid al-Fitr to him and the people of Bahrain.
We discussed the current situation in the West Asian region. Condemned attacks on the energy…— Narendra Modi (@narendramodi) March 20, 2026
பஹ்ரைன் மீதான தாக்குதல்கள் உலகளாவிய உணவு, எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், பஹ்ரைனில் வசிக்கும் இந்திய சமூகத்தின் நலனில் காட்டி வரும் அக்கறைக்கு அந்நாட்டு மன்னருக்கு நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.


