இந்த அபிவிருத்தி, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு ஒரு வெற்றிகரமான உதாரணமாக அமைந்திருப்பதாகப் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் பொறியியல் பிரிவு, மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (04) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டம், “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.
இதற்கு இலங்கை விமானப்படை தனது உடல் உழைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஆதரவை வழங்கியிருந்தது.
இத்திட்டத்தை வினைத்திறனுடன் முடிப்பதில் விமானப்படையின் பங்களிப்பு மிக முக்கியமானது என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
இந்தப் புதிய வசதிகள் பின்வரும் இலக்குகளை அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.
– பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாதுகாப்பான, தூய்மையான மற்றும் திறமையான பணிச்சூழலை உருவாக்குதல்.
– பஸ்களின் முறையான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
– தினசரி ஆய்வுகள் மற்றும் சேவைகளுக்குத் தேவையான வசதிகளை நவீனமயமாக்குதல்.
– பஸ் சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் தயார்நிலையை அதிகரித்தல்.
– பயணிகளுக்குத் தொடர்ச்சியான, தரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்துச் சேவையை வழங்குவதை உறுதி செய்தல்.
இந்த அபிவிருத்தி, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு ஒரு வெற்றிகரமான உதாரணமாக அமைந்திருப்பதாகப் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்மூலம் பஸ் சேவைகளின் ஒட்டுமொத்த தரம் உயரும் என்றும், பயணிகள் நம்பகமான சேவையைப் பெற முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

