சாதாரணமாக, நாம் அலட்சியமாக நினைக்கும் சில பழைய ரூபாய் நோட்டுகள், இன்று ஆன்லைன் சந்தைகளில் ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. அதனாலேயே, பழைய ரூபாய் நோட்டுகளை சேகரிப்பவர்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் ஆர்வலர்களிடையே பழைய நோட்டுகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
நோட்டை விற்கும்போது அது சேதமில்லாமல், சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கிழிந்தது, மடங்கியது அல்லது எழுதப்பட்ட நோட்டுகளின் மதிப்பு குறையும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக, பழங்காலப் பொருட்கள் (Antiques) மற்றும் சேகரிக்கக்கூடிய அரிய பொருட்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் காரணமாக, பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் இனி வெறும் பொழுதுபோக்கான சேகரிப்புக்காக மட்டுமல்லாமல், ஒரு முதலீட்டு வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றன.
அதிலும், குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்ட நோட்டுகள், சிறப்பு வடிவமைப்புகள், அரிய வரிசை எண்கள் (Serial Numbers) கொண்ட நோட்டுகள் போன்றவையெல்லாம் சாதாரண நோட்டுகளைவிட பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இன்றைய நிலையில், டிராக்டர் படம் பொறிக்கப்பட்ட பழைய 5 ரூபாய் நோட்டு மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதில் குறிப்பாக:
- 786 என்ற வரிசை எண்ணுடன் கூடிய நோட்டு
- நல்ல நிலையில் (சேதமில்லாமல்) இருக்கும் நோட்டு
- ரிசர்வ் வங்கி வெளியிட்ட பழைய வடிவமைப்பு
இவையெல்லாம் சேர்ந்திருந்தால், அந்த நோட்டின் மதிப்பு ரூ.30,000 வரை கூட உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லாததால், சேகரிப்பாளர்களிடையே இதற்கான தேவை அதிகரித்து வருகிறது.
இதற்காக நீங்கள் எந்தவிதமான கடைக்கோ அல்லது சந்தைக்கோ செல்ல வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் தளங்கள் மூலம் இந்த நோட்டுகளை எளிதாக விற்கலாம். சேகரிப்பாளர்களும், அதனை வாங்குபவர்களும் இதுபோன்ற அரிய நோட்டுகளை தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதில், நல்ல நிலையில் உள்ள நோட்டுகளுக்கு அவர்கள் அதிக விலை கொடுக்கத் தயங்குவதில்லை.
இந்த செயல்முறை மிகவும் எளிமையானது:
1. முதலில், ஒரு ஆன்லைன் விற்பனை தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
2. உங்கள் நோட்டின் தெளிவான புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.
3. வரிசை எண், ஆண்டு மற்றும் அதன் நிலை போன்ற விவரங்களை சரியாக குறிப்பிட வேண்டும்.
4. அதன் பிறகு உங்களது விளம்பரம் நேரலைக்கு வரும்.
5. இதையடுத்து அந்த நோட்டை வாங்க நினைப்பவர்கள் நேரடியாக உங்களை தொடர்புகொண்டு ஒப்பந்தம் செய்வார்கள்.
நோட்டை விற்கும்போது அது சேதமில்லாமல், சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கிழிந்தது, மடங்கியது அல்லது எழுதப்பட்ட நோட்டுகளின் மதிப்பு குறையும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோல், வாங்குபவர்களுக்கு உண்மையான தகவல்களை மட்டுமே வழங்குவது மிக முக்கியம். சந்தேகமான கோரிக்கைகளை தவிர்த்து, பாதுகாப்பான மற்றும் நம்பகமான பரிவர்த்தனை முறைகளையே பயன்படுத்த வேண்டும்.

