Last Updated:
இந்த கொடூரத் தாக்குதலில் 8 வயது மற்றும் 10 வயதுடைய இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மினியபோலிஸ் நகரில் உள்ள கத்தோலிக்க பள்ளியில் நேற்று காலை வகுப்புகள் தொடங்கும் போது அங்குள்ள தேவாலயத்தில் மாணவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது தேவாலயத்திற்கு வெளியே வந்த நபர் ஒருவர் ஜன்னல் வழியாக மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். ரைபிள், ஷாட்கன், பிஸ்டல் போன்ற துப்பாக்கி ரகங்களை கொண்டு அவர் இந்த தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூரத் தாக்குதலில் 8 வயது மற்றும் 10 வயதுடைய இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மாணவர்கள் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
August 28, 2025 11:31 AM IST
பள்ளியில் துப்பாக்கிச் சூடு… 2 மாணவர்கள் உயிரிழப்பு, 17 பேர் காயம்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!


