• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பள்ளிக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு… மாணவர்கள் உட்பட 10 பேர் பரிதாப பலி

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பள்ளிக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு… மாணவர்கள் உட்பட 10 பேர் பரிதாப பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 10, 2025 5:01 PM IST

ஆஸ்திரியாவின் க்ரஸ் பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News18News18
News18

ஆஸ்திரிய நாட்டில் உள்ள க்ரஸ் எனும் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளியில் இன்று அந்நாடு நேரப்படி காலை 10.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில், அந்தப் பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் மற்றும் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 பேர் வரை பரிதாபமாக மரணித்துள்ளனர்.

ஐரோப்பாவின் ஆஸ்திரிய நாட்டில் உள்ள க்ரஸ் எனும் பகுதியில் ஒரு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்திற்கு இன்று அந்நாட்டின் நேரத்தின்படி காலை 10.30 மணிக்குத் தொடர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது. அதனையடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.

அப்போது பள்ளி வளாகம் முழுக்கப் பெரும் பதட்டத்துடன் இருந்துள்ளது. உடனடியாகக் களத்தில் இறங்கிய காவல்துறையினர், அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஊழியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். அதேசமயம், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் பிடிக்கவும் முயன்றுள்ளனர்.

இந்த முயற்சியின்போது, குற்றவாளி பள்ளிக் கழிவறைக்குள் சென்று தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, காவல்துறையினர் வேறு யாரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனரா எனத் தேடியுள்ளனர். ஆனால், அந்த ஒரு நபர் மட்டுமே இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அந்த நபரையும், பள்ளியில் துப்பாக்கிச் சூட்டால் மரணித்துள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 10 நபர்களின் உடல்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தற்போது வரை துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பெயர், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என எந்த அடையாளமும் தெரியவரவில்லை. தொடர்ந்து அந்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

First Published :

June 10, 2025 5:01 PM IST

Read More

Previous Post

இந்த 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா? நீங்க லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்…!

Next Post

ஜப்ருல் அம்னோவை விட்டு வெளியேறுவது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளைப் பாதிக்காது – ஜாஹித்

Next Post
ஜப்ருல் அம்னோவை விட்டு வெளியேறுவது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளைப் பாதிக்காது – ஜாஹித்

ஜப்ருல் அம்னோவை விட்டு வெளியேறுவது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளைப் பாதிக்காது – ஜாஹித்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin