• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பள்ளிகளில் ‘ஸ்ட்ராபெர்ரி குயிக் மிட்டாய்களில் ‘ போதைப்பொருளா?: வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 29, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பள்ளிகளில் ‘ஸ்ட்ராபெர்ரி குயிக் மிட்டாய்களில் ‘ போதைப்பொருளா?: வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர் | மார்ச் 29, 2026

மலேசியப் பள்ளிகளில் ‘ஸ்ட்ராபெர்ரி குயிக்’ (Strawberry Quick) எனப்படும் மிட்டாய் வடிவிலான போதைப்பொருள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை எனப் புகிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளில், ஸ்ட்ராபெர்ரி சுவை கொண்ட மிட்டாய் வடிவில் போதைப்பொருள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும், அதனைச் சாப்பிட்டால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி விடுவார்கள் என்றும் ஒரு செய்தி வைரலாகி வந்தது. இதே போன்ற வதந்திகள் கடந்த ஆண்டு தொடக்கத்திலும் பரவியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சோதனைகளில், இது போன்ற எந்தவொரு போதைப்பொருளும் பிடிபடவில்லை. அனைத்து மாநிலக் காவல்துறை தலைமையகங்கள் மற்றும் கல்வி அமைச்சகத்திடம் (KPM) சரிபார்த்ததில், இது போன்ற சம்பவங்கள் எங்கும் பதிவாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் (Datuk Hussein Omar Khan) தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தச் செய்திகள் பெற்றோர்களை எச்சரிக்கும் நோக்கத்தில் பகிரப்பட்டாலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என டத்தோ ஹுசைன் தெரிவித்தார்.

மிட்டாய் அல்லது அறிமுகமில்லாத நபர்கள் தரும் பொருட்களை வாங்கும் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் வரும் தகவல்களைச் சரிபார்க்காமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.



Read More

Previous Post

கைதிகள் கையில் செல்போன்… பெங்களூரு அக்ரஹாரா சிறையில் பரபரப்பு… வார்டன்கள் 3 பேர் சஸ்பெண்ட்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“இந்திய வரி முறையை பின்பற்றவும்” ; நாமல் கோரிக்கை

Next Post
“இந்திய வரி முறையை பின்பற்றவும்” ; நாமல் கோரிக்கை

“இந்திய வரி முறையை பின்பற்றவும்” ; நாமல் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin