ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, ராம்பன் என்ற இடத்தில் மிக ஆபத்தான மலைப்பாதை வழியாக செல்கிறது. கடல்மட்டத்தில் இருந்து பல ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைப்பாதையில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகி உள்ளது. கடந்த மாதம் கார் ஒன்று இந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சஷ்மா அருகே கோரவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு 1.30 மணியளவில் மலைப்பாதையின் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார், பல அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, கடும் மழைக்கும் இடையே அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தல் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…