இந்நிலையில், 2 வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அக்லேஷ்வர் மற்றும் ஆரிஃப் ஆகியோர் நேற்று (ஜூலை 7) சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதன்மூலம், விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, விபத்து நிகழ்ந்தபோது அந்த ஆலையில் சுமார் 143 தொழிலாளிகள் பணியிலிருந்ததாகவும்; அதில், 61 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், 8 தொழிலாளிகள் மாயமான நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்துடன், பலியானோரின் குடும்பங்களுக்கு சிகாச்சி நிறுவனம் சார்பில் தலா ரூ.1 கோடி இழப்பீடாகக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.