மார்ச் 26 ஆம் தேதி அன்று சிங்கப்பூரை சேர்ந்த சூரியகானந்தன் மற்றும் லிம் இருவரும் சேர்ந்து வளாகத்தை நோட்டமிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
வியாழக்கிழமையன்று (மார்ச் 28) இவர்கள் மூவரும் இணைந்து வளாகத்திற்குள் நுழைந்து திருட முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தினர்.
இந்த சதி வேலைக்கு மிங் முக்கியப்புள்ளியாக இருக்கலாம் என்பது போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. லிம் மற்றும் சீயையிடம் விசாரணை நடத்தியதில் தெரிய வந்ததாக கூறியது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட மூன்று ஆண்களை ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 21 வயதுடைய ஒரு பெண்ணையும் புதன்கிழமை(மார்ச் 27) அன்று கைது செய்ததாக தெரிவித்தது. இந்த தகவலை போலீஸார் மற்றும் எச். எஸ். ஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

