Last Updated:
ஒரு பர்சனல் லோன் வாங்கும்போது பிளாங்க் செக் எதற்காக கேட்கப்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது கடன் அங்கீகரிப்பு செயல்முறையை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு உதவும்.
பொதுவாக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் (NBFC) இருந்து பர்சனல் லோன் வாங்கும் விண்ணப்பதாரர்களிடம் பிளாங்க் செக் வாங்கப்படுகிறது. ஆனால், இது கட்டாயமானது கிடையாது. பணம் பெற வேண்டிய நபரின் பெயர் போன்ற எந்தவிதமான தகவலும் இல்லாமல் வெறுமனே கையெழுத்து மட்டும் போடப்பட்டது ஒரு பிளாங்க் செக் ஆகும்.
ஒரு பர்சனல் லோன் வாங்கும்போது பிளாங்க் செக் எதற்காக கேட்கப்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது கடன் அங்கீகரிப்பு செயல்முறையை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு உதவும். ஒரு பிளாங்க் செக்கில் அக்கௌன்ட் ஹோல்டர் உடைய கையெழுத்து மட்டுமே இருக்கும். பணத்தை பெற வேண்டிய நபரின் பெயரோ, விவரமோ அல்லது வேறு எந்த தொகையோ குறிப்பிடப்பட்டு இருக்காது. ஒரு சில சமயங்களில் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும். பெரும்பாலான சூழ்நிலைகளில் செக்கை பெற வேண்டிய நபரின் பெயர் மற்றும் தொகையை பிளாங்க் செக்கை பெற்றவர் பின்னர் நிரப்பிக் கொள்வார்.
பர்சனல் லோன்களில் பிளாங்க் செக்குகளின் செயல்பாடு:
ஒரு பர்சனல் லோன் வாங்குவதற்கு பிளாங்க் செக் வழங்க வேண்டியது ஒரு கட்டாயம் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். ஆனால், சில சமயங்களில் கடன் வழங்குபவரின் பாலிசிகளில் அது குறிப்பிடப்பட்டிருந்தால் கட்டாயமாக நீங்கள் ஒரு பிளாங்க் செக்கை வழங்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக பர்சனல் லோனில் பிளாங்க் செக் பெறப்படுகிறது. ஆனால், நீங்கள் ஒரு கடனை கேட்கும்போது பிளாங்க் செக்கை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
பர்சனல் லோன்களுக்கு பிளாங்க் செக் வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது வங்கி அல்லது NBFC குறிப்பிட்டுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து அமையும். பிளாங்க் செக் என்பது கடன் வழங்குனரால் கடன் செலுத்த வேண்டிய தேதி அன்று நிரப்பப்பட்டு பணமாக பெறப்படுகிறது.
பேமெண்ட்களை கடன் பெறுநர் சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில் இந்த பிளாங்க் செக் மூலமாக லோன் பணத்தை மீட்டெடுப்பதற்கு ஒரு சில கடன் வழங்குனர்கள் பிளாங்க் செக்கை பயன்படுத்துகின்றனர். கோல்ட் லோன் போன்ற செக்யூர்டு பர்சனல் லோன் வாங்கும்போது கடன் வழங்குனர்கள் உங்களிடம் இருந்து பிளாங்க் செக்கை எதிர்பார்ப்பது கிடையாது. ஏனென்றால், ஏற்கனவே பாதுகாப்பாக அவர்களிடம் ஒரு அடமானம் உள்ளது. தாங்கள் கொடுத்த பணம் ஒருபோதும் தொலைந்து விடக்கூடாது என்பதை மறு உறுதி செய்வதற்காக கடன் வழங்குனர்கள் பிளாங்க் செக்கை கேட்பது வழக்கம்.
செக்குகளுக்கு பதிலாக தற்போது டிஜிட்டல் பேங்கிங் டிரான்ஸாக்ஷன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் ஒரு சில நிதி நிறுவனங்கள் தொடர்ந்து பிளாங்க் செக்குகளை பேக்கப் ஆக பயன்படுத்தி வருகின்றனர். தாங்கள் வங்கி அல்லது NBFC-க்கு வழங்கிய அனைத்து பிளாங்க் செக் சம்பந்தப்பட்ட நகல் அல்லது ரெக்கார்டை கடன் பெற்றவர்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது அந்த செக் மோசடி பயன்பாட்டிற்கு ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் செக் பவுன்ஸ் ஆவதை தடுப்பதற்கு கடன் பெறுநர்கள் அக்கவுண்டுகளில் போதுமான அளவு பணத்தை வைத்திருக்க வேண்டும்.
இல்லையெனில், கடன் பெறுநர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான கடன் வழங்குனர்கள் ECS அல்லது NACH ஆட்டோ டெபிட் மாண்டேட்டுகள் மூலமாக EMIகளை ஆட்டோமேட்டிக்காக பேங்க் அக்கவுண்டில் இருந்து டெபிட் செய்து கொள்கின்றனர். இதற்கு பிளாங்க் செக் தேவை இல்லை. மோசடிகள் நடைபெறாமல் தடுப்பதற்கு பிளாங்க் செக் வழங்குவதற்கு முன்பு நீங்கள் கடன் வாங்கியவர்களின் பெயர் மற்றும் தொகையை குறிப்பிட்டு அதன் பிறகு அவர்களுக்கு அந்த செக்கை வழங்குவது நல்லது.


