Last Updated:
2028 ஆம் ஆண்டிற்குள் நிலவில் மனிதர்கள் தடம் பதிக்க வைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்காகும்.
நிலவை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, ஆர்டெமிஸ்-2 விண்கலம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை பூமியில் தரையிறங்குகிறது.
கடந்த வாரம் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட ஆர்டெமிஸ்-2 விண்கலம் நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு, 4 வீரர்களுடன் பூமிக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. இது, பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, மணிக்கு 38,365 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும், அப்போது அது நெருப்பு பந்து போல காட்சி அளிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Artemis II
இதன் மூலம் விண்கலத்தின் வெப்பத் தடுப்பு கவசமும் சோதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய நேரப்படி நாளை காலை சுமார் 5.30 மணி அளவில் சான் டியாகோ அருகே பசிபிக் பெருங்கடலில் விண்கலம் தரையிறங்க அனைத்து கட்ட ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 2028 ஆம் ஆண்டிற்குள் நிலவில் மனிதர்கள் தடம் பதிக்க வைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்காகும்.

