இந் நிலையில், இந்த பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்த மேற்கு வா்தமான் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரை காவல் துறையினா் கைது செய்தனா். பி.இ. கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அந்த மாணவா் இணையதளம், சமூக வலைதளங்கள் வாயிலாக அந்த அமைப்புடன் தொடா்பில் இருந்துள்ளாா். மேலும், அந்த அமைப்பினா் அழைப்பு விடுத்த ரகசிய ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளாா்.

