காற்று மற்றும் குளிரில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, ஒரு பெரிய பாறையின் பின்னால், காய்ந்த புல் மற்றும் இலைகளின் உதவியுடன் தனக்கென ஒரு படுக்கையைத் தயார் செய்திருக்கிறார். சாப்பிட உணவு கிடைக்காததால், தன்னிடம் இருந்த டூத்பேஸ்டை சாப்பிட்டு, ஆற்றில் உள்ள தண்ணீரையும் உருகிய பனியையும் குடித்து உயிரை காப்பாற்றிக் கொண்டதாகவும் சன் கூறினார்.
அவரின்குடும்பத்தினர் மீட்புக் குழுவை அணுகிய பிறகு, தேடுதல் ஆபரேஷன் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 17 அன்று, நெருப்பு மூட்டும்போது, ஏற்பட்ட புகையை வைத்து தேடுதல் குழுவின் கவனத்தை பெற்றார்.
”இந்தப் பாதையில் நடைபயணம் மேற்கொண்டால் கரடிகள், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகளை மலையேற்றம் செய்பவர்கள் எதிர்கொள்ள நேரிடும். இந்த நடவடிக்கையின் போது எங்கள் மீட்புப் பணியாளர்களில் சிலர் காயமடைந்தனர்” என்று மீட்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்த ஆபத்தான பாதையில் 50க்கும் மேற்பட்ட மலையேறுபவர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் என அவர்கள் கூறினர்.

