ஸ்லோவாக்கியாவில் உள்ள ஒரு நகரத்தில் கரடி தாக்கியதில் 10 வயது குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
பனிச்சறுக்குக்கு பிரபலமான டட்ரா மலைகளுக்கு அருகிலுள்ள லிப்டோவ்ஸ்கி மிகுலாஸ் என்ற நகரத்தில் இது நடந்தது.
தாக்குதலுக்குப் பிறகு கரடி காட்டுக்குள் தப்பிச் சென்றதாக நகரத்தின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா கேப்சிகோவா தெரிவித்தார்.
குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கரடி வெளியே வருவதாகவும் ,குடியிருப்பாளர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.