கோலாலம்பூர்:
கடந்த மாதம், பாரிட் ராஜா, பத்து பகாட் பகுதியில், ‘குடா கெப்பாங்’ (kuda kepang) நடனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், ‘ஷோ புஜா ஜின் பத்து பகாட்’ (Show Puja Jin Batu Pahat) என்ற காணொளியில், வழிபாட்டுச் சடங்கில் ஈடுபட்ட, மூவருக்கு, ஒரு மாதச் சிறைத் தண்டனையும், RM2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களிடையே, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், இரண்டு மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் பணியாளர்களும் ஒரு பாதுகாவலரும், குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
1997-ஆம் ஆண்டு ஜோகூர் மாநில ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ், சடங்கை நிகழ்த்தியதற்கும், அதற்குத் துணை புரிந்ததற்கும், அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், அபராதம் செலுத்தத் தவறினால், கூடுதலாக 14 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும், தண்டனைக்குப் பிறகு, ஆறு மாதங்களுக்கு, ஜோகூர் இஸ்லாமிய சமயத் துறையால், அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டது.




