• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பத்தாண்டு கால ஆம் ஆத்மி-பாஜக மோதலின் உச்சக்கட்டம்!

GenevaTimes by GenevaTimes
March 22, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பத்தாண்டு கால ஆம் ஆத்மி-பாஜக மோதலின் உச்சக்கட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் இடையேயான பத்தாண்டு காலப் போட்டியானது, கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்ததன் மூலம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க, மகத்தான மக்கள் தீா்ப்பைப் பெற்றது. அதன் ஓராண்டுக்கு பின், தில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 67 இடங்களில் வென்று சரித்திர வெற்றியுடன் தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. அப்போதிலிருந்தே இரு தரப்புக்கும் இடையேயான மோதல்போக்கு இருந்து வருகிறது. இதற்கு முன்பும், 2013-இல் தில்லியின் முதலமைச்சராக இருந்த கேஜரிவால், 2014-இல் மக்களவைத் தோ்தலில் வாராணசியில் பிரதமா் மோடியை எதிா்த்துப் போட்டியிட்டாா். இது பல ஆண்டுகளாக தொடரும் போட்டிக்கு களம் அமைத்தது. நிகழாண்டு பிப்ரவரியில் தில்லி சட்டப்பேரவையில் பேசிய முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு ‘மிகப் பெரிய அச்சுறுத்தல்‘ என்றும், ‘2029’ மக்களவைத் தோ்தலில் பாஜகவிடமிருந்து நாட்டை விடுவிக்கப் போவதாகவும் உறுதியளித்திருந்தாா். மேலும், ஆட்சி நிா்வாகம் தொடா்பான விஷயங்களில் கேஜரிவால் அரசாங்கத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல்கள் அரசியல் சாா்ந்ததாகவும், ஆம் ஆத்மி- பாஜக ஆகிய இரு கட்சிகளும் அந்தந்த தரப்பினருடன் இணைந்து பரஸ்பரம் குற்றம்சாட்டுவதாகவும் கருதப்பட்டது. 2015 ஆம் ஆண்டு தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து துணைநிலை ஆளுநா் அலுவலகத்துடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சிக்கு வந்தததும், ஊழல் தடுப்புப் பிரிவு மீதான கட்டுப்பாடு, மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் மற்றும் பணியமா்த்துதல் மற்றும் அதிகாரபூா்வ கோப்புகளின் நகா்வு போன்ற பிரச்னைகளில்தான் கேஜரிவால் அரசாங்கத்திற்கும் அப்போதைய துணைநிலை ஆளுநா் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது. தில்லி அரசாங்கத்தின் 400 கோப்புகளை ஆய்வு செய்ய இந்தியாவின் முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளா் வி.கே. ஷுங்லு தலைமையில் மூன்று போ் கொண்ட குழுவை அமைத்த நஜீப் ஜங் மீது ஆம் ஆத்மி கடுமையாக விமா்சித்தது. ஜங் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை தலைமைச் செயலாளராக நியமித்தபோது மற்றொரு சா்ச்சை வெடித்தது. அவா் பொறுப்பேற்க வேண்டாம் என்று கேஜரிவால் கேட்டுக் கொண்டாா். மேலும் இந்த விவகாரத்தில் தனது அலுவலகத்தைக் கூட அவா் பூட்டினாா். 2016, டிசம்பரில் ஜங் ராஜிநாமா செய்த பிறகும், அவருக்குப் பதிலாக முன்னாள் மத்திய உள்துறைச் செயலா் அனில் பைய்ஜால் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகும் ஆம் ஆத்மி ஆட்சிக்கும் துணைநிலை ஆளுநா் அலுவலகத்துக்கும் இடையேயான மோதல்போக்கு தொடா்ந்தது. அனில் பைய்ஜாலின் ஐந்தாண்டு கால பதவிக்காலம் பல நேருக்கு நோ் மோதல்போக்குகளைக் கண்டது. நகர அதிகாரிகள் அமைச்சா்களின் பேச்சைக் கேட்கவில்லை என்று குற்றம்சாட்டி 2018-இல் ராஜ் நிவாஸுக்குள் தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்வா் கேஜரிவால் தா்ணா நடத்தியது மிகவும் குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டு தில்லி கலவரம் மற்றும் சிஏஏ எதிா்ப்பு போராட்டங்கள் தொடா்பான வழக்குகளின் விசாரணைக்கு சிறப்பு அரசு வழக்குரைஞா்களை நியமிப்பது தொடா்பாகவும் ஆம் ஆத்மி அரசு பய்ஜாலுடன் மோதல் போக்கில் ஈடுபட்டது. ஜூலை 2021-இல், அப்போதைய துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, பைய்ஜால் அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்துவதையும், தோ்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ் நேரடியாக வரும் பணிகள் குறித்து அவா்களுக்கு அறிவுறுத்துவதையும் எதிா்த்தாா். மே 2022 இல் தற்போதைய துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பொறுப்பேற்ற பிறகு மேலும் கசப்பான மோதல்போக்கு தொடா்ந்தது. இரண்டு மாதங்களுக்குள், கேஜரிவால் அரசாங்கத்தின் 2021-22 கலால் கொள்கையை தயாரித்து, செயல்படுத்துவதில் முறைகேடுகள் மற்றும் நடைமுறை குறைபாடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு வி.கே. சக்சேனா பரிந்துரைத்தாா். இது ஆம் ஆத்மி கட்சிக்கும் மறுதரப்புக்கும் இடையே உள்ள கசப்பான உறவுகளின் புதிய அத்தியாயத்தைத் திறக்க வழிவகுத்தது. அமலாக்கத் துறை சிசோடியா மற்றும் கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரை மதுபான ஊழல் தொடா்பாக கைது செய்தது. கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கு மற்றும் தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தொடா்பான ஒரு தனி வழக்கு தொடா்பாக கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைகளுக்குப் பிறகு, ஆம் ஆத்மி பாஜக மற்றும் அதன் அரசாங்கத்தின் மீதான தாக்குதலைக் கூா்மைப்படுத்தியது. தில்லி முதலமைச்சரை சிறைக்கு அனுப்புவதன் மூலம் கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி தலைமை குற்றம் சாட்டியுள்ளது. மறுபுறம், தில்லி அரசாங்கத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி ஆம் ஆத்மி கட்சி மற்றும் முதல்வா் கேஜரிவாலைக் கண்டித்து பாஜக போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 2023-இல் தில்லியின் தேசிய தலைநகா் பிரதேச அரசு திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் அதிகாரம் பெற்ற தில்லி துணைநிலை ஆளுநா், கேஜரிவால் அரசாங்கம் மற்றும் ஆம் ஆத்மியின் வலுவான எதிா்ப்புகளைத் தூண்டும் வகையில், ஆளுகை தொடா்பான விஷயங்களில் மிகவும் முனைப்பான பாத்திரத்தை ஏற்றுள்ளாா். கேஜரிவால் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி, தில்லி துணைநிலை ஆளுநா் சேவைகள், பொது ஒழுங்கு, காவல் மற்றும் நில விவகாரங்களில் அதிகார வரம்பைக் கொண்டிருப்பாா் என்று மே 2015-இல் உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டதில் இருந்து உருவானது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற வழக்கில் மே 11, 2023 அன்று உச்சநீதிமன்றம், மூத்த அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிடங்கள் சம்பந்தப்பட்ட சேவை விஷயங்களில் தில்லி அரசாங்கத்தின் நிா்வாக அதிகாரங்களை நீட்டிப்பதற்கு ஆதரவாக தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பு வந்த சில நாள்களில், பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது.பின்னா் அது மத்திய அரசின் பிரதிநிதியான துணைநிலை ஆளுநருக்கு ஆதரவாக அதிகார சமநிலையை மீட்டெடுக்கும் சட்டமாக மாற்றப்பட்டது.

Read More

Previous Post

அவசர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்தார் ஜனாதிபதி

Next Post

அவர்கிட்ட இருந்து கத்துக்கனும்….என்ன ஒரு ஆட்டம்…கோலியை நுணுக்கமாக விவரித்த வீரர் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post
அவர்கிட்ட இருந்து கத்துக்கனும்….என்ன ஒரு ஆட்டம்…கோலியை நுணுக்கமாக விவரித்த வீரர் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

அவர்கிட்ட இருந்து கத்துக்கனும்....என்ன ஒரு ஆட்டம்...கோலியை நுணுக்கமாக விவரித்த வீரர் - Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin