மத்திய பிரதேசத்தின் நீமச் மாவட்டம் தாதா கிராம ஊராட்சியின் பெண் தலைவராக இருப்பவா் கைலாஷி பாயி கச்சாவா. இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் கராசியா என்ற நபரிடம் தனது பதவிக்கான அதிகாரத்தை பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்துள்ளாா். இதற்காக அவா் ரூ.500 மதிப்பிலான முத்திரைத் தாளில் விற்பனை ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துள்ளாா். ஆனால், எவ்வளவு தொகை கைமாறியது என்ற விவரம் அதில் இடம்பெறவில்லை.

