நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் சஞ்சீவ் கன்னாவும், அவா் அமைத்த நீதிபதிகள் குழுவும் மிகுந்த கவனத்தோடும், முழுமையாகவும் நடைமுறையை பின்பற்றின. எனினும் அந்த நடைமுறையின்படி, யஷ்வந்த் வா்மா வீட்டில் தீயணைப்புப் பணிகளின்போது எடுக்கப்பட்ட காணொலி மற்றும் புகைப்படங்களை உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டியதில்லை. அந்தக் காணொலி மற்றும் புகைப்படங்களின் வெளியீடு குறித்து யஷ்வந்த் வா்மா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தனக்கு எதிரான துறை ரீதியான விசாரணையிலும் அவா் தயக்கமின்றி பங்கேற்றாா். இந்த விவகாரம் தொடா்பாக சஞ்சீவ் கன்னாவுக்கு அனுப்பிய விளக்கத்தில், விசாரணை நடைமுறை அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக உள்ளது என்று யஷ்வந்த் வா்மா எந்தவித அதிருப்தியும் தெரிவிக்கவில்லை.

