• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பணி நியமனம் இரத்துச் செய்யப்பட்ட 389 சுகாதாரப் பணியாளர்கள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பணி நியமனம் இரத்துச் செய்யப்பட்ட 389 சுகாதாரப் பணியாளர்கள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடக்கு மாகாண சுகாதரப்பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த
நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு
மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை
தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 389 சுகாதாரப் பணியாளர்களுக்கு வடக்கு மாகாணத்தால்
நடத்தப்பட்ட இரண்டு நேர்முகத் தேர்வுகளின் பின்னர் சுகாதார சேவை உதவிப்
பணியாளர்கள் என்ற அடிப்படையில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல்
நடைமுறைக்கு வரும் வகையில் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.


அத்துடன், அன்றைய தினமே அவர்களை அவர்களது பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் பணிமனையில் அறிக்கையிட்டு குறித்து ஒதுக்கிய சேவை நிலையங்களில்
கடமைகளை ஆரம்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

திறைசேரியின் சுற்றறிக்கை


நியமனத்தைப் பெற்ற 389 சுகாதாரப் பணியாளர்களும் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
25ஆம் திகதியன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு
அறிக்கையிடச் சென்றபோது அவர்கள் தற்போது பணியை ஆரம்பிக்க முடியாது என்றும்,
அந்த நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் வாய்மூலமாக
அறிவிக்கப்பட்டது.

பணி நியமனம் இரத்துச் செய்யப்பட்ட 389 சுகாதாரப் பணியாளர்கள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு | Court Order Regarding 389 Healthcare Workers


இதன்பின்னர், குறித்த நியமனம் திறைசேரியின் சுற்றறிக்கையின் அடிப்படையில்
தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன் குறித்த சுற்றறிக்கையானது மீளவும்
திறைசேரியின் செயலாளரால் 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி யன்று
வெளியிடப்பட்ட சுற்றறிக்கையால் ரத்துச் செய்யப்பட்டது.


இதையடுத்து தமக்கு நீதிகோரி குறித்த சுகாதாரப் பணியாளர்கள் வழக்குத்
தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 10ஆம் திகதியன்று மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது குறித்த மனுதாரர்களான சுகாதாரப் பணி
உதவியாளர்கள் தங்களது நியமனத்துக்கான சட்டபூர்வமான உரித்துடையவர்கள் என்பதை
முகத்தோற்றளவில் மன்று ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து ஆட்சேபனைக்காக சட்டமா
அதிபர் திணைக்களத்துக்கு கடந்த 22ஆம் திகதி திகதியிடப்பட்டதுடன் நேற்று
விவாதத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது.

நேற்று வழக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான
ரணித்தா ஞானராஜா, மரியதாஸ் யூட் டினேஸ் மற்றும் சட்டத்தரணி ஜோர்ஜ்
இம்மானுவேல், சட்டத்தரணி ஜெயபாலசிங்கம் நிஷாந்தன் ஆகியோர் சட்டத்தரணி
தியாகலிங்கம் டிலக்சனாவின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னிலையாகினார்கள்.

பிரதிவாதிகள் சார்பாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி நயோமி கஹவிட
முன்னிலையாகியிருந்தார்.

அத்துடன் வடக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்து மேலதிக செயலாளர்
சுரேந்திரனும் மன்றில் தோன்றியிருந்தார்.

இதன்போதே, வடக்கு மாகாண சுகாதரப்பணி
உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் ரத்துச்
செய்யப்பட்ட 389 பேரினதும் முழுமையான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு
நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 24ஆம்
திகதிக்கு வழக்குத் தவணையிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

விலங்குகள் மீதான கொடுமையைக் கண்டனம் தெரிவித்த சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி, வலுவான சட்ட அமலாக்கம், கடுமையான தண்டனைகளுக்கு அழைப்பு | Makkal Osai

Next Post

100% மானியம்!! விவசாயிகளுக்கு அரசு தரும் அரிய வாய்ப்பு – யார் விண்ணப்பிக்கலாம்.?

Next Post
100% மானியம்!! விவசாயிகளுக்கு அரசு தரும் அரிய வாய்ப்பு – யார் விண்ணப்பிக்கலாம்.?

100% மானியம்!! விவசாயிகளுக்கு அரசு தரும் அரிய வாய்ப்பு – யார் விண்ணப்பிக்கலாம்.?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin