சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பஞ்சம் காரணமாக பீன்ஸ் விளைச்சல் குறைந்துள்ளதால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு பீன்ஸ் வரத்து குறைவாக வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் காய்கறி சந்தையில், ஒரு மாதத்திற்கு முன்பு 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ், கடந்த வாரம் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இந்த வாரம் படிப்படியாக விலை உயர்ந்து கிலோ 180 முதல் 200 ரூபாய்க்கு பீன்ஸ் விற்கப்படுகிறது. கடும் வெயில் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதாலும், விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது என விழுப்புரம் காய்கறி சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரம் காய்கறி சந்தைகளில் இருக்கும் கடைகளுக்கு குறைந்த பட்சம் ஒரு கடைக்கு 800 கிலோ வரை பீன்ஸ் வரும். ஆனால் தற்போது வரத்து குறைவு காரணமாக ஒரு கடைக்கு 750 கிலோ வரை தான் பீன்ஸ் காய்கறி வருகிறது.
பெங்களூர், கோலார், ஓசூர் போன்ற பகுதியிலிருந்து பீன்ஸ் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது எனவும் வியாபாரிகள் கூறினர். மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் பீன்ஸ் விலை கேட்டதும் ஒரு கிலோ வாங்கும் வாடிக்கையாளர்கள் கூட கால் கிலோ வாங்கி செல்கிறார்கள். ஏனென்றால் சென்ற வாரம் 140 ரூபாய்க்கு விற்கும் காய்கறி இந்த வாரம் 180, 200 ரூபாய்க்கு விற்கிறது என ஆச்சரியத்திலும், அச்சத்திலும் செல்கிறார்கள் என விழுப்புரம் காய்கறி வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
