தொடர்ந்து பஞ்சாப் அணியை யுவராஜ் சிங் வழிநடத்திக் கொண்டிருந்த காலத்தை நினைவுபடுத்திய அவர், “நான் இர்பான் பதானை லாங்-ஆனில் நின்று பார்த்ததை நினைவு கூர்கிறேன். அவர் எங்கள் அருகே வந்து, ‘மேட்சை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டார். நாங்கள் ‘ஆமாம், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், உங்களை நேரில் பார்ப்பது கனவாக இருக்கிறது’ என்று பதிலளித்தோம்.

