ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்று வரும் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற பஞ்சாப் அணி 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 7.30 க்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ களத்தில் இறங்கினர். பேர்ஸ்டோ 8 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங்குடன் இணைந்து ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிரப்சிம்ரன் 25 ரன்னிலும், அவரை தொடர்ந்து தவான் 45 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 17 ரன்னில் வெளியேறினார்.
சாம் கரன் 23, ஜிதேஷ் சர்மா 27 ரன்கள் சேர்க்க கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சஷாங்க் சிங் 8 பந்தில் 2 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 176 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். சென்னை அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்தது என்பது கவனிக்கத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)