சிங்கப்பூர்: கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாட்டு உடன்பாட்டில் பசுபிக் தீவு நாடுகளை இணைய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய அதிகார வரம்பிற்கு அப்பால் கடல் வாழ் உயிரினங்களையும், கடல் சூழலையும் பாதுகாக்க இந்த உடன்பாடு முயல்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த உடன்பாட்டில் கடல் பாதுகாப்பு மற்றும் கடல் தூய்மை பராமரிப்பு போன்ற கடல் சார்ந்த சுகாதார நடவடிக்கைகள் குறித்த கருத்துக்கள் பெரிதும் இடம்பெற்றிருக்கும்.

