தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று முன்தினம் (04.07.2026) வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பசில் ராஜபக்ச நாட்டுக்கு வருவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டு என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு பசில் ராஜபக்ச நாட்டுக்கு வருவதும் தனக்குத் தெரியாது எனவும் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதும் தெரியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்களில் ஈடுபடும் வேலையை மாத்திரமே செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பலமான கூட்டணியாக ஒன்று சேர்ந்து அடுத்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

