கோலாலம்பூர்:
ஹரி ராயா ஐடில்பித்ரி (Hari Raya Aidilfitri) பண்டிகையை முன்னிட்டு, தேங்காய்ப்பாலுக்கான (Santan) தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு வியாபாரி தனது ஒரு நாள் பயன்பாடான 500 தேங்காய்களில் இருந்து வியக்கத்தக்க வகையில் 10,000 தேங்காய்களாக உயர்ந்துள்ளதைக் கண்டுள்ளார்.
அம்பாங், தாமான் நிர்வான்லாவில் உள்ள கொம்ப்ளெக்ஸ் முஹிபாவில் 2005 முதல் கடை நடத்தி வரும் 44 வயதான மஸ்லான் ஜைனல் அபிடின் கூறுகையில், அவர் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய நள்ளிரவு முதல் மதியம் 1 மணி வரை இடைவிடாமல் உழைக்கிறார் என்றார்.
வழக்கமாக இரண்டு ஊழியர்களைக் கொண்டு இயங்கும் இவரது கடையில், தற்போது வேலைப்பளு காரணமாக எட்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


தேவை அதிகரித்தாலும் அவற்றின் விலை; சிறு பொட்டலம்: RM3, 500 கிராம்: RM6, 1 கிலோகிராம்: RM12 மற்றும்
கெரிசிக் (Kerisik): அளவைப் பொறுத்து RM4 மற்றும் RM8 ஆகிய விலைகளில் தொடர்ந்தும் விற்கப்படுவதாக அவர் சொன்னார்.
சிறந்த தரம் மற்றும் சுவையைப் பேணுவதற்காக, தேங்காய்கள் பேராக் மாநிலத்தின் பாகன் டத்தோ (Bagan Datuk) பகுதியிலிருந்து கொண்டு வரப்படுகின்றன.
மலாய் கலாச்சார சமையலில் தேங்காய்ப்பால் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் செய்யப்படும்: ரெண்டாங் (Rendang), லெமாங் (Lemang), லோன்டாங் (Lontong), செருண்டிங் (Serunding), குயே தலாம், தெபுங் பெலிடா மற்றும் டோடோல் போன்ற இனிப்பு வகைகளுக்கு தேங்காய்ப்பால் இன்றியமையாதது.
“ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் நாங்கள் மிகுந்த வேலைப்பளுவுடன் இருப்போம். போதுமான விநியோகத்தை உறுதி செய்ய நள்ளிரவிலிருந்தே பணிகளைத் தொடங்குகிறோம்,” என்று மஸ்லான் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.




