Last Updated:
இதேபோன்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கு பக்சார் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் நேற்று கட்சியில் இணைந்தவருக்கு இன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
243 இடங்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
சட்டமன்ற தேர்தலில் பாஜ க101 தொகுதிகளில் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 71 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இந்நிலையில் இன்று 12 பேர் கொண்ட 2 ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
இதற்கிடையே பீகாரில் பிரபல நாட்டுப்புற பாடகியாக இருக்கும் மைதிலி தாகூர் என்பவர் நேற்று பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் இன்று வெளியான அக்கட்சியின் 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மைதிலி தாகூருடைய பெயர் இடம்பெற்றுள்ளது. அவர் அலிநகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் புதியவர்கள் 12 பேருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மிதிலாஞ்சல் பகுதியை சேர்ந்தவரான மைதிலி தாகூருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த பகுதியில் மேலும் கணிசமான வாக்குகளை பெற பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கு பக்சார் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
October 15, 2025 8:41 PM IST
நேற்று கட்சியில் இணைந்தவருக்கு இன்று எம்.எல்.ஏ. சீட் கொடுத்த பாஜக.. பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு


