Last Updated:
உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் பதவி விலக தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொண்டால் உடனடியாக பதவி விலக தயார் என அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை எதிர்த்து, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்த ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிகபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர், ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சவுதி அரேபியவில் அமெரிக்க – ரஷ்ய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உக்ரைன் தரப்பு கலந்து கொள்ளாத நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்க வேண்டும் என்பது அவசியமில்லை என அதிபர் டிரம்ப் கூறினார்.
இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் நிலைப்பாட்டை அதிபர் டிரம்ப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை பாதுகாப்பதற்கான வாக்குறுதிகளைத்தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். தான் பதவி விலகினால் தான் உக்ரைனில் அமைதி திரும்பும் என நினைத்தால், அதற்கும் தான் தயாராக இருப்பதாகவும், உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொண்டால் உடனடியாக பதவி விலகவும் தயார் எனவும் உக்ரைன் அதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 24, 2025 9:09 AM IST
“நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் பதவி விலக தயார்” – ஜெலன்ஸ்கி அறிவிப்பு!


