சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தீபாவளி பண்டிக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பண்டிகையையொட்டி காய்கறி விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.
திருச்சியில் பழமையான மற்றும் மிகப்பெரிய மார்க்கெட் என்றால் காந்தி மார்க்கெட். திருச்சியின் முக்கியமான மார்க்கெட்டாக திகழும் இங்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் என அனைத்தையும் வாங்கிவிட முடியும் ஆகையால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.
காந்தி மார்க்கெட்டில் சிறிய மற்றும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 முதல் 60 ரூபாய் மட்டுமே இருந்தது. கேரட் பீன்ஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகள் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரையும், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் கிலோ 50 ரூபாய், கீரை வகைகள் 25 முதல் 30 ரூபாய் வரையும், தேங்காய் ஒன்று ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நவாப் காலத்து ஸ்டைல் பிரியாணி… ஆற்காட்டில் காலை முதலே களைகட்டும் விற்பனை…
பழ வகைகளில் ஆப்பிள் கிலோ ரூ.120, சீத்தாப்பழம் கிலோ ரூ.140, மஞ்சள் வாழைப்பழம் கிலோ ரூ.65, மாதுளை ஆரஞ்சு போன்ற பழங்கள் கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களில் மல்லிப்பூ கிலோ ரூ.200, ரோஜா பூ கிலோ ரூ.300வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
