
இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து – வெங்கட தத்தா சாய் ஆகியோரின் திருமணம் உதய்ப்பூரில் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
டிசம்பர் 22 ஆம் தேதியான நேற்று காலை உதய்ப்பபூரில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். தெலுங்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடத்தப்பட்டது.
இந்த திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகாத நிலையில், ஒரு சில புகைப்படங்களை திருமணத்தில் பங்கேற்றவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அவை இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
குறிப்பாக மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை இணையமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிக விருப்பங்களை குவித்துள்ளது.
திருமணத்தையொட்டி சிந்துவின் சொந்த ஊரான ஐதராபாத்தில் நாளை வரவேற்பு நடைபெறவுள்ளது. சிந்துவின் திருமண கொண்டாட்டங்கள் கடந்த 20 ஆம் தேதி சங்கீத் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஹால்தி, பெல்லி குதுரு, மெகந்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திருமணத்தின்போது சிந்து க்ரீம் வண்ண சேலை அணிந்திருந்தார். அதற்கு மேட்ச்சிங்காக மணமகன் தத்தா ராய் ஷெர்வானியில் காட்சி அளித்தார்.
மணமகன் – மணமகள் தரப்பினர் நீண்ட காலமாக நல்ல தொடர்பில் இருந்துள்ளனர். மணமகன் வெங்கட தத்தா சாய் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர் பிரபல பொசிடெக்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் செயல் இயக்குனராக இருந்து வருகிறார்.
இந்தியா சார்பாக சர்வதேச பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று வரும் பி.வி. சிந்து 5 முறை உலக சாம்பியன்ஷிப் படத்தை பெற்றுள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தையும், 2020-இல் டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)