செராங்கூனில் உள்ள நெக்ஸ் ஷாப்பிங் மாலில் பெண்ணை மானபங்கம் செய்ததாக 49 வயதுமிக்க ஆடவர் கைது செய்யப்பட்டார்.
ஷாப்பிங் மாலின் எஸ்கலேட்டர் படியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பெண்ணின் பின்பகுதியை அவர் வேண்டுமென்றே தொட்டதாகக் கூறப்படுகிறது.
தேசிய தின சிறப்பு TOTO: இந்திய மதிப்பில் 37 கோடி – வென்று மாஸ் காட்டிய அதிஷ்டசாலி நபர்!
அடையாளம் தெரியாத ஆடவர், மாலில் வைத்து பெண்ணை மானபங்கம் செய்ததாக கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு 11.31 மணியளவில் புகார் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை அடையாளம் கண்ட அதிகாரிகள், 15 மணி நேரத்திற்குள் அவரை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இதே போன்று குறைந்தது ஐந்து மானபங்க வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இந்நிலையில், 49 வயதான ஷரில் ஹாசன் என்ற அவர் மீது நேற்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம்.
மேலும் விசாரணைகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நீதிமன்றத்திற்குத் திரும்புவார் என சொல்லப்பட்டுள்ளது.
பொது அமைதிக்கும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதுபோன்ற குற்றவாளிகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும், இதுபோன்ற வழக்குகளை கடுமையாகக் கையாள்வோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுபோதையில் அரை நிர்#வாணமாக படுத்து கிடந்த ஆடவர் – கைது செய்த போலீஸ்

