மகாவா என்ற அந்த எலி, 8 வயது வரைதான் வாழ்ந்தது. அதற்குள்ளான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 100 கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிபொருட்களை கம்போடியாவில் கண்டறிந்து அழிக்க அந்நாட்டு ராணுவத்திற்கு உதவி உள்ளது. அதுவும் 2016 தொடங்கி, 2021 வரையிலான 5 வருடங்களுக்குள் செய்துள்ளது அந்த எலி. இதனால் மக்கள் சார்பாக எலிக்கு நன்றி சொல்லும் விதமாக, சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தினமான நேற்று (ஏப்ரல் 4), கம்போடியாவில் இதற்கென அந்நாட்டு ராணுவம் சிலை வைக்கப்பட்டுள்ளது.


