வரலாற்றுச் சிறப்புமிக்க உட்லண்ட்ஸ் – ஜோகூர் பாலத்தின் 100வது ஆண்டு விழாவை சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து கொண்டாடுகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க கொண்டாடும் வகையில், இரு நாட்டு தலைவர்களும் இன்று பாலத்தில் சந்தித்து பேசினர்.
அவர்கள் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு பாலத்தில் 100 புறாக்கள் பறக்க விடப்பட்டன.
ஜொகூர் கடல் பாலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே தரைவழிப் பயணத்திற்கான முக்கிய இணைப்பான கடல் பாலத்தில் ஜூன் 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

