இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியதும், ரோஹித் சர்மா-யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக இறங்கினர். ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பின், மூன்றாவது வீரராக கே.என் ராகுல் களத்திற்கு வந்தார். ராகுல் கிரீஸுக்கு வந்து தனது பேட்டிங்கிற்கு தயாராகிக் கொண்டிருந்த போது, அருகில் நின்று கொண்டிருந்த ஆஸி., சுழற்பந்து வீச்சாளர் லயன், ராகுல் நம்பர் 3 க்கு இறக்கியது குறித்து கிண்டல் செய்வதைக் கேட்க முடிந்தது, “ஒரு டவுன் பேட்டிங் செய்ய நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்?” என்று அப்போது லயன் கிண்டலடித்தார்.

