நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் இந்த மோதல் இன்று (5) ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அங்கு நிலவும் பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த கைதிகளில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நீர்கொழும்பு மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த மோதல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

