01
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, 2002ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தின் கடற்கரையில் காம்பாட் (Khambhat) வளைகுடாவில் ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொலைந்த நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரம் சுமார் 9,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. நகரம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியிருந்தாலும், எப்படி மூழ்கியது என்பது தற்போதுவரை மர்மமாகவே உள்ளது.

