குயின் எலிசபெத் வாக்கில் நேற்று முன்தினம் (நவ.13) நீரில் மிதந்து கொண்டிருந்த ஆடவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
காலை 11.30 மணிவாக்கில் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் கூடாரமிட்டு இருப்பதையும் Stomp பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் வர்த்தக, தொழில்துறை துணையமைச்சர்
உதவி வேண்டி காலை 9 மணியளவில் அழைப்பு வந்ததாக காவல்துறை அந்த தளத்திடம் தெரிவித்தது.
பின்னர் அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) வீரர்கள் அந்த நபரின் உடல் நீரில் இருந்து மீட்டனர்.
மேலும் 69 வயதுமிக்க அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்கள் குழு உறுதி செய்து அறிவித்தது.
முதற்கட்ட விசாரணையில், இதில் எந்த தவறும் நடந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கவில்லை.
விசாரணைகள் தொடர்கின்றன.
லிட்டில் இந்தியா: தேக்கா நிலையத்தில் வார இறுதியில் ஏற்படும் சண்டை சச்சரவுகள்… காவல்துறை தலையீடு

