எம்.எச்.எம். சியாஜ்
கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.
சேருநுவர, சோமாவதி வனப்பகுதி ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராட சென்றவர்களே இவ்வாறு மாயமாகியுள்ளனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காணாமல் போன மூவரும் தங்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் இணைந்து மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போதே, திடீரென நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் கடற்படையின் உயிர் காப்புப் பிரிவினரும், சேருநுவர பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் மாயம்
எம்.எச்.எம். சியாஜ்
கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.
சேருநுவர, சோமாவதி வனப்பகுதி ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராட சென்றவர்களே இவ்வாறு மாயமாகியுள்ளனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காணாமல் போன மூவரும் தங்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் இணைந்து மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போதே, திடீரென நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் கடற்படையின் உயிர் காப்புப் பிரிவினரும், சேருநுவர பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் மாயம்
எம்.எச்.எம். சியாஜ்
கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.
சேருநுவர, சோமாவதி வனப்பகுதி ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராட சென்றவர்களே இவ்வாறு மாயமாகியுள்ளனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காணாமல் போன மூவரும் தங்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் இணைந்து மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போதே, திடீரென நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் கடற்படையின் உயிர் காப்புப் பிரிவினரும், சேருநுவர பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

