கோலாலம்பூர்,
உடன்படிக்கை மீறல் தொடர்பாக தொடரப்பட்ட சிவில் வழக்கில், (Mareva Injunction) உடைமைகள் விற்பனை தடுப்பு உத்தரவவை மீறியதற்காக Alpha Capital (M) Bhd நிறுவனத்தின் இரு இயக்குநர்கள், சயெட் மகாசிர் பதாக் மற்றும் அவரது மனைவி எர்னா எலியனா இருவருக்கும் இன்று உயர் நீதிமன்றம் 20 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கியது.
நீதிபதி யூஸ்ரின் ஃபாயிட்ஸ் யூசுப், கடந்த ஆண்டு செப்டம்பர் 5 மற்றும் நவம்பர் 22 ஆம் தேதிகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை அவர்கள் மீறியதற்காக இந்த தண்டனையை விதித்தார்.
இருப்பினும், அவர்கள் Mareva உத்தரவுக்கேற்ப முழுமையாக இணங்க, இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கலாம் என, சிறை தண்டனையின் அமலாக்கத்திற்கு தற்காலிக இடைநீக்கம் வழங்கப்பட்டது.
மேலும், இருவருக்கும் தலா RM10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதையும் ஏழு நாட்களில் செலுத்தாவிட்டால், மேலும் 7 நாட்கள் சிறை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு, 64 முதலீட்டாளர்கள், Alpha Capital நிறுவனத்தை எதிர்த்து தொடர்ந்தனர். அவர்களின் மாதாந்திர வருமானம் தொகை RM19.83 மில்லியன் செலுத்தப்படாததைக் கொண்டு வழக்குத் தொடரப்பட்டது.
Mareva Injunction என்பது, வழக்கு முடிவுக்கு வரும்வரை எதிர்தரப்பு வாதி தனது சொத்துகளை விற்பனை செய்ய முடியாத தடுப்பு உத்தரவை குறிக்கிறது.




