டிஜிட்டல் ரீதியாக வழங்கப்படும் சாட்சிகளுக்கு நீதிமன்றங்கள் எப்படி பதிலளிக்கும் என்பதில் இந்த சட்டம் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. BSAஇன் கீழ் டிஜிட்டல் ரீதியாக செய்யப்படும் தொலைதொடர்புகள் உதாரணமாக வாட்ஸ்அப் சாட்டுகள் மற்றும் ஸ்க்ரீன் ஷாட்கள் நீதிமன்றத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற உள்ளது.
ஆனால், இதில் ஒரு சில நிபந்தனைகள் உள்ளன. அனைத்து ஸ்க்ரீன் ஷாட் அல்லது ஃபார்வேர்ட் செய்யப்பட்ட மெசேஜ்கள் தகுதி பெரும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது. அதன் உண்மைத் தன்மையை சோதிப்பதற்கு சட்டத்தில் ஒரு சில நிபந்தனைகள் உள்ளன. அதுமட்டுமின்றி, ஒருவருடைய போனில் இருக்கும் மெசேஜை ஆதாரமாக எடுத்துக் கொள்ளாது.
ஆம், நிச்சயமாக. உங்களுடைய போன் உங்களை பிரச்சனையில் மாட்டி விடுவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எது தகுதிபெறும்? டிஜிட்டல் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் எது எடுத்துக் கொள்ளப்படாது? என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
ஆம், ஆனால் ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. டிஜிட்டல் ரீதியாக இருப்பதால் எந்த ஒரு எலக்ட்ரானிக் பதிவையும் மறுக்கக்கூடாது என்று BSAவில் உள்ள பிரிவு 61ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சாட் மெசேஜ்கள், ஆடியோ நோட்ஸ், ஸ்கிரீன் ஷாட்கள், PDF மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் போன்றவை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். எனினும், பதிவு செய்யப்பட்ட அசல் சாதனம் என்பது முதன்மை ஆதாரமாக கருதப்படும். அந்த சாதனத்தை நீங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு அது சோதிக்கப்பட்டு பின்னர் அதில் உள்ள கன்டண்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
எனினும், நீங்கள் காண்பிக்கக்கூடிய ஸ்க்ரீன் ஷாட்கள், சாட்டுகளின் PDF அல்லது பிரிண்ட் அவுட் போன்றவை இரண்டாம் பட்ச ஆதாரமாகவே எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு பிரிவு 63 (4) சான்றிதழ் தேவைப்படுகிறது. அதன் எலக்ட்ரானிக் பதிவை அடையாளம் கண்டு, அந்த ஆதாரம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ் இல்லாமல் உங்களுடைய ஸ்கிரீன்ஷாட்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது.
எந்த ஒரு மெசேஜாக இருந்தாலும் சரி, அதன் உண்மை தன்மையை அறியாமல் தேவையில்லாமல் அதனை ஃபார்வேர்ட் செய்வது சட்டரீதியாக தவறு என்பதை நீதிமன்றங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. சில சூழ்நிலைகளில் தேசிய பாதுகாப்பு அல்லது வெறுப்பை உமிழும் பேச்சுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் போலீசாரால் கைது செய்யப்படுவார். குரூப் சேட்டுகளைப் பொறுத்தவரை, அமைதியாக இருப்பதும் அந்த மெசேஜை ஏற்றுக் கொண்டதற்கு அர்த்தமாக எடுத்துக் கொள்ளப்படும்.
துரதிஷ்டவசமாக இதற்கான பதில் ஆம், இந்திய சட்டத்தை மீறக்கூடிய எந்த ஒரு மெசேஜை நீங்கள் அனுப்பி இருக்கும்போது அதனால் சட்டரீதியான தண்டனைக்கு ஆளாக நேரிடும். எனவே, வாட்ஸ்அப் உரையாடல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு கட்டாயமாக ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும். தீங்கு இல்லாத மீம்கள் அல்லது மெசேஜ்களை அவற்றின் உள்ளடக்கங்களை சரிபார்க்காமல் ஃபார்வேர்ட் செய்வதும் தொழில்நுட்ப சட்டம் 2000-ல் உள்ள விதிகளின்படி உங்களுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
July 20, 2025 3:38 PM IST

