
Last Updated:
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நீட் தேர்வில், 2025 ஆம் ஆண்டு எந்த முறையில் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எந்த முறையில் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி (AYUSH), கால்நடை மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நீட் தேர்வில், 2025 ஆம் ஆண்டு எந்த முறையில் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒரே நாளில், ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு பேனா மற்றும் காகிதம் முறையில் (OMR தாள் முறையில்) வழக்கமான நடைமுறையிலேயே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இன்பநிதி நண்பர்களுக்காக எழுந்து நின்றேனா? மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம்
நீட் தேர்வு நடப்பாண்டு ஆன்லைனில் கணினி வழி முறையில் (CBT – Computer Based Test) நடைபெறலாம் என சில தகவல்கள் வெளியான நிலையில், OMR முறையிலேயே நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பப்பதிவு தொடங்கலாம்.
January 16, 2025 10:38 PM IST

