Last Updated:
ஆனந்தின் வாழ்க்கை பயணம் கடினமான பாதையாக இருந்தாலும், அன்பு மற்றும் நம்பிக்கையின் சக்தியால் அவர் உயர்ந்து வருகிறார்
வாழ்க்கை முழுவதும் சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றார் என்று தனது இளைய மகன் ஆனந்த் அம்பானி குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி உருக்கமாக பேசினார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் அதன் தலைவருமான நீடா அம்பானி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது அறப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு அமெரிக்காவின் மாசா சூசட்ஸ் மாகாணத்தில் கவர்னர் விருது வழங்கி கௌரவித்தார்.
அமெரிக்காவில் புகழ் பெற்ற ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் நீடா அம்பானி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அங்கு பேசிய நீடா அம்பானி, இந்தியா 2036- இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய பிரதிநிதியாக இருக்கும் நீடா அம்பானி இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின்போது தனது இளைய மகன் ஆனந்த் அம்பானி குறித்து உருக்கமாக பேசிய நீடா அம்பானி, ‘எனது மகன் வாழ்நாள் முழுவதும் சவாலை எதிர்கொண்டு வந்தார். அவருக்கு ஆன்மீகத்தின் மீது ஆர்வம் அதிகம். வலிமையான மன உறுதியை கொண்டவராக ஆனந்த் இருந்தார்.
அவைதான் தனது வாழ்க்கை துணையாக ராதிகா மெர்ச்சென்டை ஆனந்த் தேர்வு செய்வதற்கு காரணமாக இருந்தது. இருவருக்கும் இடையிலான உறவு மேஜிக்கலாக இருக்கும். ஆனந்தின் வாழ்க்கை பயணம் கடினமான பாதையாக இருந்தாலும், அன்பு மற்றும் நம்பிக்கையின் சக்தியால் அவர் உயர்ந்து வருகிறார்’ என்று கூறினார்.
February 18, 2025 9:38 PM IST
‘வாழ்க்கை முழுவதும் சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்’ – இளைய மகன் குறித்து நீடா அம்பானி உருக்கமான பேச்சு


