Last Updated : 24 Oct, 2025 10:48 AM
Published : 24 Oct 2025 10:48 AM
Last Updated : 24 Oct 2025 10:48 AM

ஆக்லாந்து: நியூஸிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்தது. 3 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
சுமார் 80 நிமிடங்களுக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் 14 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளையாடிய நிலையில் 3.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது.
சிறிது நேரம் கழித்து மழை நின்ற நிலையில் போட்டியை 8 ஓவர்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. வீரர்கள் களத்தில் இறங்க தயாராக இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.முதல் போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இங்கிலாந்து அணி 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
FOLLOW US
தவறவிடாதீர்!


